Sunday, November 23, 2014

ஒரு சண்டை from sunday chatting

அறிமுகம்: ரமாவும் உமாவும் face book தோழிகள். இருவரும் பொய் பெயரில் வலம் வருபவர்கள்.

வாங்க போகலாம், என்ன பண்றாங்கன்னு பாப்போம்.

" சண்டே எப்படி போகுது ரமா?

" எதோ போகுது உமா "

"ஏன் சலிச்சுக்குற "

"என்னத்த சொல்ல?"

"உன் பிரண்டு நான் இல்லையா? எங்கிட்ட சொல்ல கூடாதா?"

"ஒன்னும் இல்லடி. விடு "

" புருசன் கொடுமையோ?"

"ஐயோ அவர் தங்கம்"

"அப்பறம். மாமியா கொடுமையோ ?"

"ஆமாம்டி"

" ரொம்ப படுத்துறாளோ?"

" அத என் கேக்கற? "

" உன் புருஷன் கேக்கமாட்டரா இதெல்லாம்?"

" அவர் கேட்டார்னா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் சனியன்"

" லீவ்ல எங்கயும் போகலையா?"

" எங்கடி உமா இந்த மாமியார்கிழம் இருக்கிற வரைக்கும் நான் எங்கயும் போக முடியாது .சனியன் வாழவும் விடாது சாகவும் விடாது"

"....................................."

ரமா : 'எங்க காணும் திடிர்னு ஓடிட்டா'

எதோ உணர்ந்த ரமா பின்னல் திரும்பி பார்க்க மாமியார் முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள்.

" ஏண்டி நான் சனியனா? நான் சீக்கிரம் போய் சேரலையா ? ஏன் கொன்னுபுடேன் ஒரேஅடியா போய்டுறேன் . இன்னைக்கு வரட்டும் அவன்"

ரமா:கடவுளே

No comments:

Post a Comment