அறிமுகம்: ரமாவும் உமாவும் face book தோழிகள். இருவரும் பொய் பெயரில் வலம் வருபவர்கள்.
வாங்க போகலாம், என்ன பண்றாங்கன்னு பாப்போம்.
" சண்டே எப்படி போகுது ரமா?
" எதோ போகுது உமா "
"ஏன் சலிச்சுக்குற "
"என்னத்த சொல்ல?"
"உன் பிரண்டு நான் இல்லையா? எங்கிட்ட சொல்ல கூடாதா?"
"ஒன்னும் இல்லடி. விடு "
" புருசன் கொடுமையோ?"
"ஐயோ அவர் தங்கம்"
"அப்பறம். மாமியா கொடுமையோ ?"
"ஆமாம்டி"
" ரொம்ப படுத்துறாளோ?"
" அத என் கேக்கற? "
" உன் புருஷன் கேக்கமாட்டரா இதெல்லாம்?"
" அவர் கேட்டார்னா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் சனியன்"
" லீவ்ல எங்கயும் போகலையா?"
" எங்கடி உமா இந்த மாமியார்கிழம் இருக்கிற வரைக்கும் நான் எங்கயும் போக முடியாது .சனியன் வாழவும் விடாது சாகவும் விடாது"
"....................................."
ரமா : 'எங்க காணும் திடிர்னு ஓடிட்டா'
எதோ உணர்ந்த ரமா பின்னல் திரும்பி பார்க்க மாமியார் முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள்.
" ஏண்டி நான் சனியனா? நான் சீக்கிரம் போய் சேரலையா ? ஏன் கொன்னுபுடேன் ஒரேஅடியா போய்டுறேன் . இன்னைக்கு வரட்டும் அவன்"
ரமா:கடவுளே
No comments:
Post a Comment