Thursday, November 27, 2014

பிள்ளைப் பருவம்


அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு கதை கேட்ட அந்த நாட்கள்
பள்ளி விட்டு வந்து வீதியில் ஓடி விளையாடிய பிள்ளைப்பருவம்

ஊரே அடங்கிய வேளையிலும்
திருச்சி வண்டி எனப்படும் கடைச வண்டி வரும் வரை ஒளியல் பிடித்து, குச்சி எடுத்து வரும் அப்பாவை கண்டு ஒளிந்த நாட்கள்

சனி ஞாயிறு இரண்டு நாட்களும் எங்கள் கால்கள் சுற்றாத காடுமேடு இல்லை
சுவைக்காத பழங்கள் இல்லை.

மழை வந்தால் போதும்
ஏரிக்கு போய் களிமன் கொண்டுவந்து
விதவிதமாய் பொம்மைகளும் வண்டிகளும் செய்த நாட்கள்.

வேகமாய் ஓடிவந்து மல்லிகாவின் மேல் மோதிவிட்டு இருவருமே விழுந்த நாட்கள்.

ஆற்றினிலே குதித்துவிட்டு
அம்மாவிடம் அடி வாங்கியது.

பதின்பருவம்

வாய்க்கால் கரை புரண்டோடும்
என் மனமும் கழைகூத்தாடும்

எனையொத்த பெண்ணெவளும் இருந்து விட்டால்
பாய்ந்திடுவேன் தலைகீழாக.

அந்த காலம் இனிமேலும் வராது

என் பிள்ளைகளுக்கும் கிடைக்காது

No comments:

Post a Comment