Thursday, November 27, 2014

எனது தொழில்

சினிமாவாழ்க்கை, ஒன்பது ஆண்டுகாலம் ஒவியனாய் இருந்ததை ஒப்பிட்டால் சினிமா வாழ்க்கை தன் கால் தூசிக்கு சமம் என்று நடிகர் திரு சிவக்குமார் சொன்னதாக படித்தேன்.,

இது உண்மையென்றால் இத்தனை காலம் தனக்கு சகல வசதியையும் கொடுத்த சினிமாவை இதை விட கேவலபடுத்த முடியாது.

என் பள்ளிப்பருவத்தில் வகுப்பில் தகப்பனாரின் தொழிலைச்சொல்ல மிகவும் வெட்கப்படுவேன். நான் ஓர் ஏழை என்று சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.அது அறியாத வயது.

எல்லாப்பிள்ளைகளும் என் அப்பா விவசாயி, ஆசிரியர், மளிகைக்கடைகாரர், என்று சொல்லும் போது என் அப்பா ஒரு நெசவாளி என சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.

இப்பொது நான் செய்யும் தொழிலை என் குறிப்பிட முடியவில்லை. காரணம் மார்க் கம்பெனி பெயர் கேட்கிறார்.எனது பாதுகாப்பிற்காக கம்பெனி பெயர் பொதுவில் வைக்கப்படுவதில்லை. ஆனால் இன்பாக்ஸில் கேட்பவர்களுக்கு தொழில் விபரங்களை சொல்லி விடுகிறேன்.

இந்தத்தொழில்தான் என்னை வாழ வைத்தது. இந்த தொழில்தான் என் இரண்டு பிள்ளைகளை என்ஜினியர் ஆக்கியது. இந்த தொழில்தான் என்னையும் சொந்த வீடு கட்ட வைத்தது.

என் தொழில் உங்களைப்போல் அலுவலகத்தில் கம்யூட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாது. உங்களைப்போல் அழுக்கு படாமல் வியர்வை இல்லாமல் வேலை செய்யமுடியாது.

பாதுகாப்பு கவசங்களை உடுத்திக்கொண்டு எத்தனை உயரமென்றாலும் மேலேறி வேலை செய்ய வேண்டும்.
ஒரு நெசவாளனாய் இருந்து காலமாற்றத்தில் ஒரு பைப் வெல்டராகி பின் கண்களின் பார்வை குறைபாட்டால் ஒரு (structure fabrication) பிட்டராகி இன்று ஒரு டீம் லீடராக இருக்கிறேன். புதிய தொழிலார்களுக்கு சந்தேகம் வரும் போது நானே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விடுவேன். இது செய்ய முடியாது என்று சவால் விட்டால் ஏன் முடியாது என்று காரியத்தில் இறங்குபவன்.

என் தொழில் இரண்டு முறை முகத்தில grinding michine ல் அடி வாங்கி என் மூக்கு வளைந்து போனது. இருந்தும் என் தொழிலை நேசிக்கிறேன்.

No comments:

Post a Comment