பெண் - யார் இவள்?
நம்மை காக்க வந்த கடவுளா?
இல்லை நம்மை அழிவிலிருந்து மீட்க வந்த தேவதையா?
இங்கே நம் இதிகாசங்களில் கூட பெண்ணுக்கே முதலிடம்.
சீதை இல்லாமல் இராமயணம் இல்லை.
பாஞ்சாலி இல்லாமல் மகாபாரதம் இல்லை.
சரி இவைகளை கற்பனை கதைகள் என்று ஒதுக்கி விடலாம்.
சிலப்பதிகாரம்?
கண்ணகியும் மாதவியும் இங்கே.
பெண் சரித்திரம் படைத்திருக்கிறாள், பல சரித்திரங்களை உடைத்திருக்கிறாள்.
சரித்திரங்களை புரட்டி பார்த்தால் உண்மை புரியும்.
ஒருவனுக்கு குழந்தையும் அம்மாதான்.
மனைவியும் அம்மாதான்.
எல்லா சுப காரியங்களுக்கும் பெண்ணுக்கே முதலிடம்.
இப்படி பட்ட பெண்ணை வணங்க வேண்டாம்.
குறைந்த பட்சம் அவளும் ஒரு மனுசி என்று அங்கிகரித்தாலே போதும்.
என் வளர்ச்சிக்கு காரணம் என் மனைவிதான். என் தாரம் எனக்கே ஆதாரம்.
பெண்மையை போற்றுவோம்
பெண் கல்வி அளிப்போம்
அவளுக்கும் ஆணில் சரிபாதி அளிப்போம்.
வாழ்க பெண்கள்.
No comments:
Post a Comment