புதுசா ஒரு வீட்டுக்கு போறிங்க.
அவங்க எப்படி அவங்க பழக்கவழக்கம் எப்படி இருக்கும் எதுவும் உங்களுக்கு தெரியாது.
அங்க இந்த மாதிரி அறுசுவை சாப்பாடபோட்டுட்டு உங்களையே உர்ருன்னு பாத்துக்கிட்டு இருந்தா உங்களால ரசித்து சாப்பிட முடியுமா?
எனக்கு இரண்டு நண்பர்கள்.
முதல் நண்பர் வீட்டில் கொஞ்சம் ஆச்சாரம்.
அங்க சாப்பிட கொஞ்சம் எனக்கு கூச்சமா இருக்கும்.
ஏதாவது தப்பா நினைப்பாங்களோ என.
எல்லாத்திலும் கொஞ்சமா சாப்பிடுவேன்.ரொம்ப நாசூக்கா.
இரண்டாவது நண்பர் வீட்ல இந்த மாதிரி அறுசுவை இருக்காது.
இலை சாப்பாடு இருக்காது.
ஒரே குழம்புதான்.
எனக்காக செய்த ஆடோ, கோழியோ. மீனோ.
தட்டு நிறைய கறியை அள்ளிப்போட்டு "சாப்பிடு அண்ணா"
என பாச மழை பொழியும் தங்கை-நண்பரின் மனைவி-
நான் இங்க கூச்சம் இல்லாமல் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடுவேன்.
முதல் நண்பர் வீட்டில் காபி குடித்தாலும் அதை குடிக்க கூச்சமாக இருக்கும். வாய் வைத்து குடித்தால் ஏதும் நினைத்து கொள்வார்களோ என.
இது பெண்களுக்கு:
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஆண்கள் யாராவது வந்தால் தேவையான பொருள்களை அவர் முன்னே வைத்து விட்டு
"ஏதாவது வேனும்ன்னா கூச்சப்படாம கேளுங்க"
என்று சொல்லி விட்டு உங்கள் கணவரை பக்கத்தில் இருக்க செய்து விட்டு,
அவர் உங்களை பார்க்காதபடி மறைவாக நின்றபடி அவர் சாப்பிடுவதை ரசியுங்கள்.
அவர் மனதார உங்கள் சமையலை ரசித்து சாப்பிடுவார்.
எங்கள் வீட்டில் புதிதாக வரும் ஆண்களுக்கு நடைபெறும் விருந்தோம்பல் இது.
பெண்கள் வந்தால் உங்கள் பாடு.சமையல் கட்டில் உக்காந்து கிட்டு நல்லா மொக்குவிங்க.
அது எனக்கு தெரியாதா?
No comments:
Post a Comment