Thursday, November 6, 2014

ஒரு சிறுவன், ஒரு அழகிய சிறுமியின் புகைப்படத்தை தெருவிலிருந்து கண்டு எடுக்கிறான்.
பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொள்கிறான்.
அந்த சிறுமி எங்காவது தென்படுகிறாளா என்று பார்க்கிறான். அவளை காணவில்லை.
தினமும் அவளை தேடுகிறான்.
அந்த படத்தை தன் புத்தக பெட்டியில் பத்திரமாக வைக்கிறான்.
நான் பெரியவானாகி இவளையே திருமணம் செய்வேன் என்று நினைக்கிறான்.

காலம் மாறுகிறது. சிறுவன் இப்போது இளைஞன். நன்கு படித்து நல்ல வேலையும் கிடைக்கிறது.
அவனுக்கு திருமணமும் நடக்கிறது.இருப்பினும் அந்த சிறுமியை மட்டும் மறக்க முடியவில்லை.
இந்நேரம் அவளுக்கும் திருமணம் ஆகி இருக்கலாம். இங்குதானெ எங்காவது இருப்பாள் என நினைக்கிறான்.

அவனை திருமணம் செய்த பெண்ணும் மிக அழகானவள். அதை விட அன்பானவள்.
மனைவியின் அன்பில் அந்த சிறுமியை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறான்.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
குழந்தை தாயைப்போலவே கொள்ளை அழகு.

ஒரு நாள்

மறு நாள் தங்கள் திருமணநாள் ஆதலால், வீட்டை சுத்தம் செய்தாள்.
கணவன் வேலைக்கு போய்விட்டான்.
ஒரு பக்கமாக சுத்தம் செய்யும் போது அந்த பழைய புத்தகப் பெட்டியை திறந்து பார்க்கிறாள்.
அதில் அந்த சிறுமியின் படத்தை பார்க்கிறாள்.

பார்த்தவளின் முகம் ஒரு கணம் மலர்ந்து மறுகணம் கேள்வி குறியானது.

இந்த படம் இங்கு எப்படி வந்தது?
மீண்டும் அந்த படத்தை அங்கேயே வைத்தாள்.

கணவன் வீட்டுக்கு வந்ததும் அதைப்பற்றி கேட்டாள்.

அவன், தன் சிறுவயது காதல்கதையை சொன்னான்.

அவளுக்கு தாங்க முடியாத சந்தோசம்.
நான் இப்படியொரு பாக்யம் செய்தவளா? எனக்கு இப்படி ஒரு அன்பு கணவனா?

இல்லாயா பின்னே? அந்த படத்தில் இருந்தது அவள் அல்லவா?

நான்தான் அந்த சிறுமி என்று சொல்ல நினைத்து பின் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

'வேண்டாம். நாளை எங்கள் திருமண நாள் அல்லவா? இன்று சொல்வதை விட நாளை நல்ல பரிசு பொருளுடன் சொன்னால் நன்றாக இருக்கும்'

மறுநாள் காலை குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு பரிசு பொருட்கள் வாங்க கடைக்குப் போனாள்.

கணவனுக்கு நல்ல விலையுயர்ந்த பரிசு ஒன்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டும் தெருவில் இறங்கி நடந்தாள்.

நடந்தாள் என்று சொல்வதை விட வானத்தில் பறந்தாள் என்றே சொல்லலாம்.

வீட்டுக்குப்போய் கணவனிடம் நான்தான் அந்த சிறுமி என்று சொன்னால் தன் கணவன் எப்படி மகிழ்வான் என்று என்னியபடி வந்தாள். அவளுக்கு நிலை கொள்ள வில்லை. எப்போது வீடு போய் சேர்வோம் என்று ஒரே ஆவல். அவளுக்கு வானத்தில் பறப்பது போல் ஒரு பிரமை.

ஆம் அவள் வானத்தில்தான் பறந்தாள்.

எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் அவளை தூக்கி எறிந்தது.

அவள் பரிசு பொருட்கள் தெருவிலே.

ஒரு உண்மை யாருக்கும் தெரியாமல் குழி தோன்டி புதைக்கப்பட்டது, அவளையும் சேர்த்து.

இரண்டாம் பாகம்:

மனைவி போன சோகம் இருந்தாலும் தன் குழந்தைக்காக உயிர் வாழ்ந்தான் அவன்.
குழந்தை தாயை போலவே வெகு அழகு. மிகவும் அறிவு.
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள். பள்ளிக்கு செல்லவும் ஆரம்பித்தாள்.
குழந்தையின் அன்பில் மனைவியின் பிரிவை மறந்தான்.
அதே சிரிப்பு, அதே நடை, அதே அழகு, அதே அன்பு.. அதே............

ஏதோ பொறி தட்டியது அவனுக்கு.
வேகமாய் ஓடிப்போய் தன் புத்தக பெட்டியை திறந்து அந்த புகை படத்தை பார்த்தான்.

அதில்..... அதில் அவனு குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்படியென்றால்?

அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது. அவன் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்........

No comments:

Post a Comment