உதிர்த்துக்கொண்டே
இருக்கிறாய்
கோர்த்துக்கொண்டே
இருக்கிறேன்
உன் அழகை.
அருவியாய்
கொட்டுகிறாய்
தெப்பமாய்
நனைகிறேன்
உன் அன்பில்.
பூமழையாய்
பொழிகிறாய்
வாசமாய்
மலர்கிறேன்.
கொஞ்சும் உன்
அருவியை
நிறுத்தி வையேன்,
கொஞ்சம்
மலையருவியையும்
ரசிப்போம்.
No comments:
Post a Comment