Sunday, November 9, 2014

கொஞ்சலும் மிஞ்சலும்

"கொஞ்சம் வா" 

 "கொஞ்ச வா?" 

 "ம்" 

 "ம்ஹூம்"

 "அச்சமா?"

 "ம்" 

 "அஞ்சினால் ஆவதென்ன அஞ்சுகமே?" 

"அஞ்சுவதும் மிஞ்சுவதும் அஞ்சுகத்திற்கழகு.அஞ்சாமல் கொஞ்சுவது ஆடவரன்றோ?"

 "கிட்டவா"

 "எனை கட்டவா?" 

 "கிட்டக் கிட்ட வந்து நின்றால் எட்டி எட்டி போவதென்ன ஏந்திழையே?"

 "எட்டி எட்டி போவதுதான் எனக்கழகு"

 "அள்ளவா?" 

 "உனை கிள்ளவா?" என்று சொல்லி ஓடிவிட்டாள்.

No comments:

Post a Comment