Tuesday, November 4, 2014

பொம்மைக்கு
சோறுட்டிய குழந்தை
'வயிறு ரொம்பிடுச்சா?'
என கேட்கிறது

பக்தனின் கேள்விக்கு
பதில் சொல்லாத
கடவுள்போல்
மௌனித்து நிற்கிறது
பொம்மை

கடவுளின் மௌனத்தை
புரிந்த பக்தன் போல்
மனநிறைவுடன்
புன்னகைக்கிறது
குழந்தை.

No comments:

Post a Comment