நான் திருமணம் செய்த புதிது. காலையில போனா இரவுதான் வருவேன். இதில் பொண்டாடிய கொஞ்ச நேரமேது?
எதிர்வீட்டில் ஒரு நடுத்தர தம்பதிகள். அவர்களும் என்னைப்போல்தான். தினக்கூலி.
இரண்டு பேரும் வேலைக்கு போவாங்க. பிள்ளைங்க நாலைந்துக்கு மேல் நண்டும் சிண்டுமாய்.
லீவு விட்டால் புத்தகத்தை தூக்கி வைத்துக் கொள்வேன். எதிர் வீட்டில் பார்த்தால் புருசன் பொண்டாடிக்கு பேன் பார்ப்பதும் தலைவாரி விடுவதும்,பொண்டாடி புருசனுக்கு பேன் பார்ப்பதும் நடக்கும்.
அப்படி ஒரு கொஞ்சல் குளாவல்.
திடிர்னு பாத்தா செம்ம அடி விழும். அந்தம்மா கெட்ட கெட்ட வார்த்தையால திட்டும்.
அப்பறம் கொஞ்ச நேரத்துல கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க..
ஒருநாள் அந்தம்மா என் வீட்டுக்காரிகிட்ட கேட்டாங்களாம்,
'என்ன உன் புருசன் உங்கிட்ட ஆசையா பேசவே மாட்டானா?சந்தோசமா வச்சிக்கிறானா' ன்னு.
மிக வசதியான குடும்பங்களில் வாழ்வதாக காட்டிக்கொ'ல்'வார்கள்.
என் சிறுவயதில் கூட நிறைய குடும்பங்கள் ஊரார் போற்ற வாழ்ந்தவர்கள் உண்டு.ஆனால் உண்மையில் தனித்தனி படுக்கை.
#ரவி சார் போஸ்ட் பார்த்ததும் எனக்கு அவர்கள் நினைவுதான் வந்தது
No comments:
Post a Comment