Tuesday, November 4, 2014

மனம் என்னும் கண்ணாடி

கொஞ்சம் திரும்பிப் பார்

நீ எத்தனை அழகென்று

நீ மட்டுமே அழகு

உன்னால் எதையும் செய்ய முடியும்
உன்னால் மட்டுமே முடியும்

யாரையும் வெறுத்து விடாதே
யாரேனும் உன்னை காயப்படுத்தியிருக்கலாம்

யாரேனும் உன் செயலை
தூற்றியிருக்கலாம்
யாரையும் வெறுத்து விடாதே

தவறி விழும் குழந்தையின்
சிறகை முறித்து விடாதே
அதன் வலி புரிந்தவன்தானே நீ

உன் மனவலிமை புரிந்தவன் தானே நீ
மனவலிமையற்ற வார்த்தைகளை
உதிர்த்து விடாதே

உழைப்பின் மேன்மை புரிந்தவன்
அல்லவா நீ
உழைப்பவரை இகழ்ந்து விடாதே

அழும் குழந்தை தாய் மடி தேடுவதை போல்
உனக்கு ஒரு தாய் மடி
வேண்டுமல்லவா
பெண்களை இகழந்து விடாதே
ஆணின் சோகங்களை இறக்கி வைக்கும்
பெட்டகமல்லவா அது

நீ மனிதன் நீ மட்டுமே மனிதன்
உன்னால் சுயமாக சிந்திக்க முடிகிறதல்லவா?

நீயே மனிதன்
நீ மட்டுமே மனிதன்
வா கை கோர்ப்போம்

No comments:

Post a Comment