நேர் வகிடெடுத்து
நெற்றியிலே பொட்டும் வைத்து
கார்குழல் முடித்து
கருங்கூந்தலில் பூவும் வைத்து
பூப்போட்ட பாவாடை சரசரக்க
அதிலே இவன் மனம் கிறுகிறுக்க
கண்கள் நிலம் பார்க்க
கால்கள் நோகாமல்
கனிவாய் நடக்கும் பெண்ணே
உன் பாதை மாறியதென்ன
பாவியிவன் இங்கிருக்க.
No comments:
Post a Comment