கொலையும் செய்வாள் பத்மினி
*********************
"எத்தன நாளைக்கு இப்படி நாம திருட்டுத்தனமா சந்திக்கிறது கௌதம்?"
"வெயிட் வெயிட். கூடிய சீக்கிரம் இதுக்கு முடிவு கட்டிடலாம் அனிதா. என் பொண்டாட்டி ஒரு டூவீலர் வேனுமுன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. இப்ப ஒரு ஆக்டிவா மாட்டியிருக்கு. நாலு மாசத்துல மூனு பேர காலி பண்ணிட்டு இரண்டு கை மாறியிருக்கு"
"எனக்கு புரியல கௌதம்.என்ன சொல்லவர?"
"அந்த வண்டிய வாங்குனவன் எவனும் உயிரோட இல்ல. கிட்டதட்ட எமன். ரொம்ப சல்லிசா விலைக்கு வருது. புது வண்டி. இந்த வண்டிய காட்டுனா எம்பொண்டாட்டி பத்மினி வானாங்க மாட்டா"
"வாவ்...! செம்ம ஐடியா"
"ம் அதான், புரியுதா இப்ப. வண்டிய பத்மினி பேருல வாங்க போறேன். இராசி இல்லாத வண்டின்னு அவ கிட்ட சொல்லமாட்டேன். அந்த வண்டி ராசிப் படி கூடிய சீக்கிரம்.... இல்லன்னாலும் நானே பிரேக் வயர கட் பண்ணிடுறேன். அப்பறம் அவ மூலமா கிடைக்குற இன்சூரன்ஸ் பணம், சர்விஸ் பணம் எல்லாம் நமக்குத்தான். ஓகேவா?"
"சூப்பர்"
"சரி ஏதாவது கொடுத்துட்டுப்போ"
"ம்ம்ம்மா"
*******************
கவனமாக பத்மினியின் பெயரில் வண்டியை வாங்கினான் கௌதம்
"என்ன பப்பி வண்டி பிடிச்சிருக்கா?"
"எப்படிங்க வண்டி புதுசா இருக்கு,விலை இவ்வளவு கம்மியா இருக்கு?"
"ஓனர் வெளிநாடு போறான் பப்பி அதான் வந்த விலைக்கு விக்கிறான்"
"நான் ரொம்ப லக்கிங்க"
"நானும்தான்"
****************
"ஏங்க வண்டியில ஏதோ சத்தம் வருது. நீங்க ஆபிஸ் போற வழியிலதான ஹோன்டா ஷோரூம். அப்படியே சர்விஸ் விட்டுட்டு சாயந்தரம் எடுத்தாந்துடுங்க"
மறுத்தால் சந்தேகம் வரும் என்று நினைத்த கௌதம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் எதிர்பட்ட அனிதா வழிமறித்து ஏறிக்கொண்டாள்.
"என்ன கௌதம் இந்த வண்டி?"
"அந்த சனியன் சர்விஸ் விட சொல்றா
மறுத்தா சந்தேகம் வரும்"
"ம்"என்றபடி கௌதமை கட்டிபிடித்த அனிதா அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்
"என்ன அனி?"
என்றபடி திரும்ப முயன்றவன் அப்போது தான் கவனித்தான்
இரும்பு ஷீட்களை ஏற்றி வந்த ட்ரெயிலரை.
வேகமா பிரேக் அடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்து இரண்டு பேரையும் சேர்த்து ஆக்டிவா வோடு தூக்கி எறிந்தது அந்த ட்ரெயிலர் எமன்.
அதே நேரம்.
'ஏன்டா இராசி இல்லாத வண்டிய வாங்கி என்னையாட கொல்லப்பாக்குற?'
என்று முனகினாள் பிரேக் வயரை பிடுங்கி விட்ட பத்மினி.
No comments:
Post a Comment