Thursday, November 27, 2014

வலி


கோடிஸ்வரனோ கோவனான்டியோ ஒரு குடும்பத்தின் முதல் வாரிசு என்பது ஒரு வரம்.

ஆண்குழந்தை பிறந்துள்ளது என்ற கடிதம் கண்டதும் ஓடோடி வந்தேன் மருத்தவமனைக்கு.

என்னை கண்டதும் என் மனைவியின் முகத்தில் வெற்றி பெருமிதம்.

புதிதாய் பூத்த பூந்தளிரை கையில் எடுத்............

"அம்மாஆஆஆஆஆஆஆஆ"

அந்த மருத்துவமனையே கிடுகிடுக்கும் அலறல்.

என் உடல் ஒரு வினாடி தூக்கி போட்டது.

'என்ன?'

மனைவியை நோக்கினேன்

"ஆம்பளங்களுக்கு என்ன செத்த நேரம். எங்கள பாத்திங்களா? ஒருத்தி குழந்தை பெற்று விட்டாள்"

முதன்முதலாய் பெண்ணின் வலியை உணர்ந்தேன்.

என் கையில் இருந்த பூந்தளிர் அழகாய் முறுவலித்தது.

No comments:

Post a Comment