Friday, November 28, 2014

வாழ்க்கை வளமாய் அமைய:

உங்கள் அன்பிற்குரியவரின் முட்டாள்தனங்களை பெரிது படுத்தாதீர்கள்.

அதேவேளை உங்கள் முட்டாள்தனங்களை நக்கல் அடிக்கப்படும் போது அவர்களோடு சேர்ந்து சிரியுங்கள்.
------------------------
உங்களை அறிவாளி போல் காட்டிக்கொள்ளாதீர்கள்

உங்கள் அன்பிற்குரியவர் மிகுந்த அறிவாளி போல் சித்தரியுங்கள்.
--------------------------
நீங்கள் மிகவும் அழகென்று பீற்றி கொள்ளாதீர்கள்

அதே சமயம் உங்கள் அன்பிற்குரியவர் மிகவும் அழகென்று புகழுங்கள்.
--------------------------

எதிலும் உங்கள் அன்பிற்குரியவரிடம் கலந்து முடிவெடுங்கள்.
உன்னை கலக்காமல் எதுவும் செய்ய மாட்டேன் என்று நம்ப வையுங்கள்
அதன்படி நடந்து காட்டுங்கள்.

முக்கியமாய் உங்கள் அன்பிற்குரியவருக்கு பிடிக்காத எதையும் செய்யாதீர்கள்.

உங்கள் அன்பிற்குரியவரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

அதிமுக்கியமாய் உங்கள் அன்பிற்குரியவரிடம் பொய் சொல்லாதீர்கள்.

இல்லறத்தின் பலதவறுகள் நீங்கள் சொல்லும் முதல் பொய்யிலிருந்து ஆரம்பம் ஆகிறது.

வாழ்க்கையை ரசிக்க அறிவாளி ஆக இருந்தால் மட்டும் போதாது..

கொஞ்சம் முட்டாள்தனமும் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் நான் முட்டாளாகவே இருக்கிறேன்.

No comments:

Post a Comment