Thursday, November 27, 2014

பாவை


'பாகற்காய் கசக்கும்'

'பாகற்காய் எனக்கு பிடிக்காது'

'பாகற்காயை நல்லா வேகவைத்து பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு பின் குழம்பு வைக்கனும்'

'பாகற்காயை முதல்ல நல்லா கசப்பு போக நல்லா எண்ணெய் வறுத்துவிட்டு பின் குழம்பு வைக்கவும்'
இப்படி எல்லாம் சொல்பவர்கள்,
ஒரு பாகற்காயின் கசப்பையே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் எப்படி வாழ்க்கையின் கசப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்?

எங்கம்மா பாகற்காயடன் மொச்சைக்கட்டையும் வறுத்து ஊறவைத்து குழம்பு வைப்பாங்க. நல்லாருக்கும். இப்ப எங்க வீட்ல மற்ற கிழங்கு வகைகள் கிலோ கணக்கில் வாங்கினால் இந்த பாகற்காயை கால் கிலோ என்ற அளவில்தான் வற்புறுத்தி வாங்க சொல்வேன்.

வீட்டில் பிள்ளைகளுக்கு பாகற்காய் பிடிக்காது, கத்தரி பிடிக்காது வெண்டை பிடிக்காது.

பாவக்காய் குழம்பு வச்சி யாரு திங்குறது? நாம இரண்டு பேரும் சாப்பிட்டாத்தான் உண்டு-மனைவியின் அங்காலாய்ப்பு.

முழு பாகற்காயை என்னால் எந்த முகசுளிப்பும் இன்றி சாப்பிட முடியும்.

"நல்லா முத்திய காயா பழுக்காததா கெட்டியா இருக்குறதா பாத்து எடுங்க"

-இது என் மனைவி எனக்கு பாகற்காய் வாங்க சொல்லிக்கொடுத்த டெக்னிக்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகளை சரிசெய்யும்

இரத்ததின் சர்க்கரை அளவை குறைக்கும்.

அரிப்பு தோல்தடிப்பு, சோரியாசிஸ் இவற்றுக்கு நல்லது.

முக்கியமாய் வேகவத்து தண்ணீரை வடிகட்ட கூடாது. கசப்பு போக எண்ணெயில் வறுக்க கூடாது. அதன் சுவை மாறாமல் சாப்பிடவும்.

No comments:

Post a Comment