Saturday, November 22, 2014

இரட்டைவரி நோட்டு-5

எனது நண்பர் ஒருவரின் அண்ணன் மிகவும் வித்யாசமானவர்

அண்ணார் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர். கொஞ்சம் அல்ல நிறைய பழமைவாதி.
ஆனால் மிக நேர்மையானவர்.

நாங்கள் குடும்பத்தோடு அவர் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் எங்களை உபசரிப்பார்கள்.

ஆனாலும் எங்களுக்கும் அவருக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழை ஓடவே செய்தது. அது நாங்கள் ஒரே இனம் என்றாலும் அவர்கள் சைவம், நாங்கள் அசைவம்.

ஆனால் அந்த வீட்டு அண்ணியார் இதையெல்லாம் கணக்கில் கொள்ள மாட்டார்.

சகலவித அபிலாசைகள் கொண்ட சாதாரண பெண்..

ஆனால் அண்ணா பார்க்கத்தான் சாது.ஆனால் உள்ளுக்குள் படுபயங்கர வில்லன்.

மனைவி என்பவள் அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கும் மட்டும்தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

சைக்கிள் சப்தம் கேட்டால் போதும், விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளும் எங்களோடு சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் அண்ணியாரும் கப்சிப் ஆகிவிடுவர்.

அவர்கள் வீட்டில் ஓர் உளுத்துப்போன கட்டில் இருந்தது.

சொன்ன வரதட்சனையை சரியாக செய்யவில்லையென்ற ஒரே காரணத்திற்காக அந்த கட்டிலை உபயோக படுத்தாமல் விட்டவர்.

மாமனாரின் கட்டிலை மட்டும்தான், மாமனாரின் பெண்ணை அல்ல.

இதை சாடிசம் என்று சொல்லலாம்
அந்த கட்டிலைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணியாரின் மனம் மிகுந்த வேதனைக்குள்ளானதை நானறிவேன்.

மனைவி அம்மா வீட்டிற்கு போக கூடாது. பெண்கள் புத்தகம் படிக்கக் கூடாது என்று நினைப்பவர்.

அண்ணியார் வார இதழ்களையும் கதை புத்தகங்களையும் ஒளித்து வைத்து படிப்பார்.

நாங்கள் போகும்போதெல்லாம் அண்ணியாரையும் குழந்தைகளையும் எங்க வீட்டுக்கு அழைத்து வர கேட்போம்.அவர்களுக்கும் கொள்ளை ஆசை.ஆனால் அண்ணா மறுத்து விடுவார்.காரணம் நாங்கள் அசைவம் என்ற ஒரே காரணத்திற்காக.

ஆனால் இப்படி பட்ட ஒழுக்கசீலருக்கு பிள்ளை தறுதலையாக போய்விட்டான். இப்போது அவர்களோடு தொடர்பு கொண்டு பலவருடங்கள் ஆகின்றன.

No comments:

Post a Comment