பெரும்பாலோர்க்கு பிடித்தது அடுத்தவர் தவறுகளை பார்த்து ரசிப்பது. இதை வைத்து காசாக்க தெரிந்தவர்கள் Zee போன்ற தொலைகாட்சியினர்.
சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இவர்களை போன்றவர்களால்தான் சக்கைப் போடு போடுகிறது.
'உன்னை விட்டேனா பார். உன்னை சந்தி சிரிக்க வைக்கல, எங்கப்பனுக்கு நான் பொறக்கல' ன்னு மார்தட்டி கடைசியில் இரண்டு பேரும் மண்ணாபோய் மானம் நெட்ல ஏறும்.
எங்க மாமி ஒருத்தங்க இருக்காங்க. ஒரு முப்பத்திரண்டு, முப்பத்துமூனு வருசத்துக்கு முன்னாடி
காஸ் அடுப்பு அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம்
அடுப்புக்கு விறகுகளையே நம்பி இருந்த காலம்.
பக்கத்து வீட்டில் ஒரு பெண் வாழ்க்கைப் பெற்று வந்திருந்தாள். அவளைப் பற்றி புகார் படிக்க மாமியிடம் வந்தாள் அந்த பெண்ணின் மாமியார்.
எங்க மாமி ஏக் மார் தோ துக்கடா பார்ட்டி.
எதுவா இருந்தாலும் எடுத்து போட்டேன் கழுத்த முறிச்சேன்தான்.
"வாத்தியாரூட்டம்மா, இந்த கூத்த கேட்டிங்களா? புதுசா வந்த என் மருமக அடுப்புக்கு சீமெண்ண ஊத்தி பத்த வைக்குறா"
"இந்தா கிழவி.இந்த பஞ்சாயத்தெல்லாம் இங்க கொண்டு வராதே.நானே சீமெண்ண ஊத்திதான் அடுப்பு பத்த வைக்கிறேன்."
விசயம் இத்தோடு முடிந்து விட்டது.அதை காது கொடுத்து கேட்டால் ஒரு மருமகளின் வாழ்க்கை அந்தரத்தில்.
எங்க வீட்டுக்காரி எப்படித்தெரியுமா?
"அடியே செல்வி கேட்டியா கதைய. நம்ம இவ இருக்கால்ல அவ எவனையோ வச்சிருக்காலாமுல்ல"
"இந்த பிரச்னையெல்லாம் பேசிக்கிட்டு என் வீட்டுக்கு வராதே.அவ சௌகரியம் அவ வச்சிருக்கா.. நம்ம பொழப்பயே நமக்கு பாக்க நேரமில்ல. வேனுமுன்னா நீயும் வச்சிக்க.அதென்ன அடுத்த வீட்டு கதைய பேசறது" என்பாள்.
No comments:
Post a Comment