என் எண்ணம்
தொட்டு செல்லும்
வண்ணத்துப்பூச்சியே
நீ எனை மறந்தாலும்
நான் உனை மறவேன்
'பாகற்காய் கசக்கும்'
'பாகற்காய் எனக்கு பிடிக்காது'
'பாகற்காயை நல்லா வேகவைத்து பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு பின் குழம்பு வைக்கனும்'
'பாகற்காயை முதல்ல நல்லா கசப்பு போக நல்லா எண்ணெய் வறுத்துவிட்டு பின் குழம்பு வைக்கவும்'
இப்படி எல்லாம் சொல்பவர்கள்,
ஒரு பாகற்காயின் கசப்பையே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் எப்படி வாழ்க்கையின் கசப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்?
எங்கம்மா பாகற்காயடன் மொச்சைக்கட்டையும் வறுத்து ஊறவைத்து குழம்பு வைப்பாங்க. நல்லாருக்கும். இப்ப எங்க வீட்ல மற்ற கிழங்கு வகைகள் கிலோ கணக்கில் வாங்கினால் இந்த பாகற்காயை கால் கிலோ என்ற அளவில்தான் வற்புறுத்தி வாங்க சொல்வேன்.
வீட்டில் பிள்ளைகளுக்கு பாகற்காய் பிடிக்காது, கத்தரி பிடிக்காது வெண்டை பிடிக்காது.
பாவக்காய் குழம்பு வச்சி யாரு திங்குறது? நாம இரண்டு பேரும் சாப்பிட்டாத்தான் உண்டு-மனைவியின் அங்காலாய்ப்பு.
முழு பாகற்காயை என்னால் எந்த முகசுளிப்பும் இன்றி சாப்பிட முடியும்.
"நல்லா முத்திய காயா பழுக்காததா கெட்டியா இருக்குறதா பாத்து எடுங்க"
-இது என் மனைவி எனக்கு பாகற்காய் வாங்க சொல்லிக்கொடுத்த டெக்னிக்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகளை சரிசெய்யும்
இரத்ததின் சர்க்கரை அளவை குறைக்கும்.
அரிப்பு தோல்தடிப்பு, சோரியாசிஸ் இவற்றுக்கு நல்லது.
முக்கியமாய் வேகவத்து தண்ணீரை வடிகட்ட கூடாது. கசப்பு போக எண்ணெயில் வறுக்க கூடாது. அதன் சுவை மாறாமல் சாப்பிடவும்.
சினிமாவாழ்க்கை, ஒன்பது ஆண்டுகாலம் ஒவியனாய் இருந்ததை ஒப்பிட்டால் சினிமா வாழ்க்கை தன் கால் தூசிக்கு சமம் என்று நடிகர் திரு சிவக்குமார் சொன்னதாக படித்தேன்.,
இது உண்மையென்றால் இத்தனை காலம் தனக்கு சகல வசதியையும் கொடுத்த சினிமாவை இதை விட கேவலபடுத்த முடியாது.
என் பள்ளிப்பருவத்தில் வகுப்பில் தகப்பனாரின் தொழிலைச்சொல்ல மிகவும் வெட்கப்படுவேன். நான் ஓர் ஏழை என்று சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.அது அறியாத வயது.
எல்லாப்பிள்ளைகளும் என் அப்பா விவசாயி, ஆசிரியர், மளிகைக்கடைகாரர், என்று சொல்லும் போது என் அப்பா ஒரு நெசவாளி என சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.
இப்பொது நான் செய்யும் தொழிலை என் குறிப்பிட முடியவில்லை. காரணம் மார்க் கம்பெனி பெயர் கேட்கிறார்.எனது பாதுகாப்பிற்காக கம்பெனி பெயர் பொதுவில் வைக்கப்படுவதில்லை. ஆனால் இன்பாக்ஸில் கேட்பவர்களுக்கு தொழில் விபரங்களை சொல்லி விடுகிறேன்.
இந்தத்தொழில்தான் என்னை வாழ வைத்தது. இந்த தொழில்தான் என் இரண்டு பிள்ளைகளை என்ஜினியர் ஆக்கியது. இந்த தொழில்தான் என்னையும் சொந்த வீடு கட்ட வைத்தது.
என் தொழில் உங்களைப்போல் அலுவலகத்தில் கம்யூட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாது. உங்களைப்போல் அழுக்கு படாமல் வியர்வை இல்லாமல் வேலை செய்யமுடியாது.
பாதுகாப்பு கவசங்களை உடுத்திக்கொண்டு எத்தனை உயரமென்றாலும் மேலேறி வேலை செய்ய வேண்டும்.
ஒரு நெசவாளனாய் இருந்து காலமாற்றத்தில் ஒரு பைப் வெல்டராகி பின் கண்களின் பார்வை குறைபாட்டால் ஒரு (structure fabrication) பிட்டராகி இன்று ஒரு டீம் லீடராக இருக்கிறேன். புதிய தொழிலார்களுக்கு சந்தேகம் வரும் போது நானே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விடுவேன். இது செய்ய முடியாது என்று சவால் விட்டால் ஏன் முடியாது என்று காரியத்தில் இறங்குபவன்.
என் தொழில் இரண்டு முறை முகத்தில grinding michine ல் அடி வாங்கி என் மூக்கு வளைந்து போனது. இருந்தும் என் தொழிலை நேசிக்கிறேன்.
உங்கள் கடந்த கால அசட்டுத்தனங்களையோ தவறுகளையோ அல்லது கஷ்டங்களையோ இப்போது நினைத்துப் பாருங்களேன்.
உங்கள் முகம் புன்னகை பூக்கிறதா?
ஷார்ஜா வந்த புதிது. மொபைல் என்னிடம் இல்லை. துபாய் அத்தனை பரிச்சியம் இல்லை. எப்போதாவது ஒருதடவை வருவேன்.
மைத்துனன் அறை தெரியும்.சில இடங்கள் மட்டும் தெரியும் பார்த்தீபன் சொன்ன துபாய் பஸ்டாண்ட் துபாய் மெயின்ரோடு தெரியும்.
ஷார்ஜாவிலிருந்து பேருந்து பிடித்து வந்து ரொம்ப தெரிந்தவனாட்டாம் பேருந்து நிலையம் அடைவதற்குள் இங்க இறங்கினால் சுருக்கா போயிடலாம் என இறங்கினேன்.
இறங்கியவரை சரிதான்.
ஆனால் இறங்கியவன் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தேன்.
ஓடினேன் ஓடினேன் அரபி கடல் ஓரத்திற்கே ஓடினேன்.
அது வளைகுடாதானே.என்னை வளைத்துக் கொண்டது.
ஆஹா வழி தப்பி விட்டோம்.
திரும்பினேன். புறப்பட்ட இடத்திற்கே வந்து நின்றேன்.
என்ன செய்யலாம்.யாரை கேட்கலாம். எனக்கு உதவி செய்தது தெருவில் நிறுத்தப்பட்ட தெருவின் வரைபடங்கள்.
அதன் முன் நின்றேன்.
you are here.
என்றது நான் நிற்கும் இடத்தை காட்டி. அதிலிருந்து மைத்துனன் இருக்கும் தெருவை கண்டு பிடித்தேன்.
இதுவரை இது இரகசியமாகவே இருந்தது.
A வும் B யும் நண்பர்கள்
A வும் C யும் நண்பர்கள்
B யும் C யும் பகைவர்கள்.
A செய்வது அனைத்தும் Bக்கும்Cக்கும் மிகவும் பிடிக்கும்
B,C இருவர் செய்வதும் Aவுக்கு பிடிக்கும்
ஆனால் Bசெய்வது Cக்கோ C செய்வது B க்கோ பிடிப்பதில்லை.
A செய்வது அனைத்தும் சரியென நினைக்கும் B,
A விரும்பும் C யை விரும்புவதில்லை.
A செய்வது அனைத்தும் சரியென நினைக்கும் C,
A விரும்பும் Bயை விரும்புவதில்லை.
ஏன்?
#எனக்கே கொஞ்சம் தலை சுத்துது