Thursday, January 8, 2015

காலையில் எழுந்ததும் ஏதோ உறுத்த மன்னிக்கவும் உறுத்தாமல் இருக்கவே கைகளைப் பார்த்தேன். விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை.

நேத்து நைட் படுக்கும்போது இருந்துச்சா? சரியாக ஞாபகம் இல்லை. பாயை மெதுவாக சுருட்டினேன். காணவில்லை. எங்க போயிருக்கும்.

நைட் பாத்ரூம் போனப்ப கழண்டு விழுந்துருக்குமோ?

ஆசை ஆசையாக எனக்கு மோதிரம் வாங்கி போட்டவள் எதுவும் தெரியாமல் சமையலறையில். விசயம் தெரிஞ்சுது பேயாட்டம் ஆடுவாள்.

மெதுவாக எழுந்து பாத்ரூமில் தேடினேன். கட்டிலில் தேடுனேன். இல்லை. மெதுவாக அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி (அந்த பக்கம் திரும்பி யிருந்தாலும் கண்கள் பின்னாலும் உண்டு. :p)

"என்ன தேடுறிங்க?"

' கண்டுபுடிச்சிட்டா'

"ஒன்னுமில்ல. டீ கொடேன்"

"இல்ல வீட்ட அளக்குறிங்களேன்னு கேட்டேன்"

"ஆமா டேப்பு வச்சி அளக்குறேன்"

டீயை குடித்தபடி டீவி மேல கீழ எல்லா இடத்திலும் தேடினேன்.

இரண்டு பேர் முதல் எழுத்தையும் MS என பொறித்த ஒருபவுன் மோதிரம். . காணாம போச்சின்னுசொன்னா கொன்னேபுடுவா

குளித்தேன்.இட்லி கொடுத்தாள் பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். இட்லியை சாப்பிட்டேன்.

'அப்பாடா இதுவரை கவனிக்கல.ஒருவேளை பீரோவுல வச்சேனா?'

ஓட்டமாய் ஓடி பார்த்தேன்.ம்ஹூம்.

மொட்டைமாடிக்கு துணி காயப்போட போனேனே.
அங்கேயும் இல்லை.

இன்னைக்கு கொலை விழப்போகுது.

இருக்குற டென்சன்ல கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்தால் நல்லாருக்கும்

டீக்கடையில் பேப்பர் படித்து விட்டு திரும்ப வந்தேன்.
எல்லா வேலைகளையும் முடித்த தர்மபத்தினி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"சாப்டுறிங்களா?"

"எத்தன தடவ சாப்புடறது?"

"ஏன் மூஞ்சி இஞ்சி தின்னமாதிரி இருக்கு?"

"நல்லாத்தானே இருக்கு?"

"மோதிரம் எங்க?"

"-----------"

"இப்புடித்தான் குடித்தனம் பண்றதா?இராத்ரி மோதிரத்த எங்க கழட்டி வச்சிங்க?"

'அப்பாடா மோதிரம் கிடைத்து விட்டது.'

"எங்க இருந்துச்சி?"

"ம்.வீடு பெருக்கி குப்பைய கொட்டப்போறேன்.அதுல கிடக்குது.இப்படி குடும்பம் பண்ணா எப்படி உருப்படும். இனிமே மோதிரம் கொடுக்க மாட்டேன்"

மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

அது என்னவோ தெரியல.
தூக்கத்துல நடக்குற வியாதி மாதிரி தூக்கத்துல மோதிரம் கழட்டும் வியாதி எனக்கு.

சிலநாள் கழித்து,

"கல்யாணத்துக்கு போகனுமே கிளம்பலயா?"

"நான் வரல.நீ போய்ட்டு வா"

"நான் மட்டும் போனா நல்லாருக்காது.கிளம்புங்க"

கிளம்பினேன்.
வீட்டை பூட்டியவள் ,

"விரல காட்டு "என.சொல்லி மோதிரத்தை மாட்டி விட்டாள்.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்.

"மோதிரத்தை கழட்டு" என்றாள். கழட்டி கொடுத்ததும் மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

No comments:

Post a Comment