வாழ்க்கை
வண்ணமிகு ஓவியமல்ல, புரியாத புதிராய் திகழும் மாடர்ன் ஆர்ட்ஸ்.
வாழ்க்கை
தெளிந்த நீரோடையல்ல, கரைபுரண்டோடும் காட்டாறு.
வாழ்க்கை தேசியநெடுஞ்சாலையல்ல, சுகமாய் பயணித்துச் செல்ல,
கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பாதை.
அத்தகைய காட்டுப்பாதையில் நீங்கள் நடந்ததுண்டா?
நான் நிறைய நடந்திருக்கிறேன் நடந்தும் வருகிறேன்
எனக்கு மட்டும் கால்கள் வலிப்பதேயில்லை.
No comments:
Post a Comment