சனிக்கிழமை இரவே சொல்லிவிட்டான் ராகவன் மனைவி சுந்தரியிடமும் பிள்ளைகளிடமும்,
அமிர்தம் அத்தை நாளைக்கு வரன்னு சொல்லியிருக்காங்க. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். போற வரைக்கும் கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க.
"இதையே எத்தன தடவ சொல்லுவிங்க?எல்லா பொருளும் அதது இடத்துல இருக்கனும். டீவி போடக்கூடாது குழந்தைங்க விளையாட கூடாது. குழந்தைகள் அடம் பண்ணாம பதவிசா இருக்கனும், பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.நாம இருப்போம் குழந்தைங்க இருப்பாங்களா?"
"இரண்டு நாளோ மூன்று நாளோ. அப்பறம் போய்டுவாங்க. அதுவரைக்கும் எனக்காக ப்ளீஸ்"
சலிப்புடன் நகர்ந்தாள் சுந்தரி.
ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எல்லாப் பொருளும் ஒழுங்கு படுத்தப்பட்டன
குழந்தைகள் தயார் படுத்தபட்டார்கள்.
ஓடி ஆடி விளையாடிய குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார சொன்னால் உட்கார்வார்களோ?
நாடகம் பார்க்கா விட்டால் சுந்தரிக்கு தலை வெடித்து விடும்.அவளால் முடியுமோ?
ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் சுந்தரி சாவகாசமாக எழுந்திருப்பாள்.
மனைவியை எதிர்பார்க்காமல் ராகவன் அன்று எல்லா வேலைகளையும் செய்வான்
ஆம்பிளை அடுப்படி பக்கம் போக கூடாது என்பாள் அமிர்தம்
கொஞ்சம் அல்ல நிறைய பழைமை வாதி.
எதிலும் ஒரு நேர்த்தி இருக்கனும் உக்காந்தா குத்தம் நிமிர்ந்தா குத்தம் சொல்பவள்.
'பேருதான் அமிர்தம். மொத்தமும் விசம்'.-மனதிற்குள் கருவினாள் சுந்தரி.
ஞாயிற்றுக்கிழமை டானென்று எட்டு மணிக்கு வந்து இறங்கினாள் அமிர்தம்.
வழக்கமாக அந்த நேரத்திற்கு வீடே இரண்டுபடும் காபி தம்ளர்கள் ஆங்காங்கே கழுவாமல் நிற்கும். ராகவன் குளித்து விட்டு தலை துவட்டிய ஈரத்துண்டு கட்டிலில் கிடக்கும்.
குழந்தைகளின் பொம்மைகள் காலில் இடறும்.
சுந்தரி அவைகளை எல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள். இன்று அவைகளை எல்லாம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். காரணம் அமிர்தம் வரப்போகிறாள்.
இதோ அமிர்தமும் வந்து இறங்கினாள்
பூரணக்கும்ப மரியாதை மட்டும் இல்லாமல் வரவேற்பு தடபுடலாக இருந்தது.
சுந்தரி அவளை கவனித்தாள்.முன்னெல்லாம் கடுகடுன்னு இருக்கும் முகம் இப்போது கனிவாக.
அமிர்தம் வீட்டை நோட்டம் விட்டாள்.
சுந்தரி கொடுத்த இட்லியை தின்றுவிட்டு காபியை குடித்தவள் கிளம்பி விட்டாள்.
"நான் வரேன் ராகவா"
"நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?ஏன் அத்தை அதுக்குள்ள கிளம்புறிங்க?"
"இல்ல ராகவா.சந்தோசமா கிளம்புறேன். நல்லா கவனிச்சிங்க."
சுந்தரிக்கு சந்தோசம்.அப்பாடா தொலைஞ்சுது சனி.
"நான் போய்ட்டு வரேன் சுந்தரி"
"ம்."
வழக்கம் போல் வீடு தலைகீழானது.
மறுநாள் திங்கட்க் கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராகவனை வேலைக்கு அனுப்பி விட்டு கிடப்பது கிடக்க சுந்தரி டீவி முன்னால் உட்கார்ந்தாள்.
வாசலில் யாரோ மணி அடித்தார்கள்.
கதவை திறந்தால் அமிர்தம்
சுந்தரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
இப்படி கிழவி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்குதே.
"வாங்கம்மா வாங்க"
அமிர்தம் உள்ளே வந்தாள்
காபி தம்ளர்கள் ஆங்காங்கே
அடுப்படியில் கழுவாத பாத்திரங்கள் குவிந்தபடி ஒருப்பக்கம் துவைக்க வேண்டிய துணிகள்.
இதையெல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள் சுந்தரி.
அவளும்தான் என்ன செய்வாள்?காலையில் எழுந்து சமைத்து பிள்ளைகளை தயார் படுத்தி பள்ளிக்கு அனுப்பி விட்டு புருசனையும் அனுப்பி விட்டு கொஞ்சம் உடல் அலுப்பு போக டீவி முன்னால் உட்கார்வாள்.
இவையெல்லாம் அமிர்தம் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது.
அவசர அவசரமாக அனைத்தையும் ஒழுங்கு படுத்தினாள் சுந்தரி.
"சுந்தரி இங்க வா.அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். ஒரு டம்ளர் காபி மட்டும் கொடு"
காபி போட்டு எடுத்து போகையில் அமிர்தம் அழுது கொண்டிருந்தாள்.
"என்னம்மா ஆச்சி.ஏன் அழறிங்க?நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?"
"இல்லம்மா. நீ எதுவும் தப்பு பண்ணல. ஒரே ஒரு மகனை என் பக்கத்துல வச்சிக்க முடியாத பாவி நான். தொட்டதிற்கெல்லாம் குத்தம் குறை. மகன் கூட மருமக சிரிச்சி பேசுனா வயிறு எரியும்.எங்க நம்ம கிட்ட இருந்து மகன பிரிச்சுடுவாளோன்னு பயம் அதனாலையே அவ மேல ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருப்பேன். அவளும் பொறுத்து பொறுத்து என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டா. அதுமட்டும் இல்ல நம்ம சொந்தக்காரங்க எனனைப்பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க. இதெல்லாம் இப்பத்தான் புரியுது. எத்தனை காசு பணம் இருந்தும் என்ன? ஆதரவா பேச ஒரு மனுசாள் இல்லை.அவரும் எப்பவோ போய் சேர்ந்துட்டார். இதுக்குலாம் காரணம் நான்தான். குற்றங்குறைகளை அனுசரிச்சி போகாதது. குழந்தைங்க கிட்ட கூட எரிஞ்சு விழுந்துருக்கேன்.நேற்று கூட எனக்கு பயந்துதானே இருந்திங்க? பயமுறுத்தியோ மிரட்டியோ யாரும் யாரையும் மாத்த முடியாது.அதான் நான் உடனே கிளம்பி விட்டேன்."
சுந்தரிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.அவள் கண்ணீரை தொடைத்து விட்டாள்.
"அழாதிங்க அம்மா.இனிமே நீங்க எங்கயும் போக வேண்டாம்.எங்க
No comments:
Post a Comment