Tuesday, May 19, 2015

சங்கிலி

"சுந்தரி, இனிமே நீ அந்த சங்கிலியோட சுத்துறத பாத்தேன் தொலைச்சுடுவேன் தொலைச்சி. ச்சே...ச்சே கருமம் அந்த தெருப்பொறுக்கியோட கொஞ்சறதும் குலாவுறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல"

"அதுல என்னப்பா தப்பு? உங்களுக்கு பிடிக்கலன்னா போங்க, எனக்கு பிடிச்சிருக்கு"

"பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு எம்புத்திய...., அதிலும் நான் இல்லாத நேரம் பாத்து உன் பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கான் அந்த தெருபொறுக்கி நாய்"

"அப்பா அவன திட்டாதிங்க எனக்கு பொல்லாத கோபம் வரும்"

"ஓஹோ அந்த நாய்க்காக பெத்த அப்பனயே எதுத்து பேசுறியாமா?"

"அப்பா அவன் நாய்தான். ஆனா அவன் இல்லன்னா என்னால பாதுகாப்பா ஆபிஸ் போய்ட்டு வரமுடியாது. அதோட அவன் தெருவுல கிடக்கிறத எதுவும் திங்க மாட்டான். நம்ம வீட்ல கூட நான் தட்டுல போட்டாதான் திம்பான். அவன் வந்த வந்ததிலிருந்து திருட்டுபயம் கம்மியாடிச்சி"

அவள் சொல்வதை புரிந்து கொண்டதை போல் நன்றியுடன் வாலை ஆட்டினான் சங்கிலி.

"எப்படியாவது தொலைங்க.நான் ஆபிஸ் போறேன்"

No comments:

Post a Comment