எனக்கோ பெருங்கவலை.எத்தனை உழைத்தாலும் என்னால் பெரும்பொருள் சேர்க்க முடியவில்லையே என.
என் விருப்பத்தை கேட்டதை கொடுக்கும் தேவதையிடம் முறையிட்டு அழுது புலம்பி விட்டு அப்படியே உறங்கிப் போனேன்.
உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் என் பக்கத்தில் மரவுரி கிடப்பதை கண்டேன்.
'செல்வத்தை வேண்டினால் மரவுரி கிடைக்கிறது. தேவதையின் மேல் கோபம் கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தேவதையின் விருப்பம் இதுதான் போலும்
என மன நிம்மதியடைந்து மரவுரியை உடுத்திக்கொண்டு காட்டிற்கு கிளம்பினேன். அங்கே ஓர் ஆசிரமம் அமைத்து தவம் செய்ய ஆரம்பித்தேன்.
முதலில் காய் கனி உண்டவன் காலப்போக்கில் சருகுகளை உணவாக கொண்டேன். பின் வெறும் காற்றை மட்டும் உணவாக கொண்டேன். பின் காற்றில்லாமல் கூட வாழ பழகினேன்.
உள்ளத்தில் பேரானந்தம் கிட்டியது.
என் தவ வலிமையும் அதிகமாயிற்று.
இப்போது நான் கேட்டது எல்லாம் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குத் தேவையில்லை.
என் முன் அந்த தேவதை தோன்றினாள்
தேவதை எனக்கு செல்வம் கொடுக்கவில்லை என்ற கோபம் இப்போது இல்லை.அதைவிட வலிமையான மனஅமைதி கிடைத்தது குறித்து மகிழ்ந்தேன்....
"இப்போது சொல் . செல்வம் வேண்டுமா?" - தேவதை கேட்டாள்.
"வேண்டாம் தாயே.அதை விட மனஅமைதி எனும் பெரும் செல்வம் கிடைத்திருக்கிறது"
தேவதை மறைந்தாள்
கனவுலகிலிருந்து நனவுலகுக்கு மீண்டேன்.
பக்கத்து வீட்டு குழந்தை அம்மாவிடம் இன்னொரு சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.
அம்மா பொறுமையாக அடம் பிடிக்கும் குழந்தையை கையிலெடுத்து சாக்லேட் கொடுக்காமல் குழந்தைக்கு பால்சோறு ஊட்டினாள்.
குழந்தை சோற்றை தட்டிவிட்டு அழுதான். அன்னை அழும் குழந்தையின் முதுகில் இரண்டு வைத்தாள்.
குழந்தை வாயை மூடிக்கொண்டு இல்லை இல்லை வாயைத்திறந்தபடி சாப்பிட ஆரம்பித்தான் பால்சோற்றை.
#நான் படித்த கதையை கொஞ்சம் மாற்றி....
No comments:
Post a Comment